ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸ்.! நேரில் சென்று விளக்கமளித்த சுசீந்திரன்.!

ஈஸ்வரன் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸிற்கு இயக்குனர் சுசீந்திரன் நேரில் விளக்கமளித்ததை தொடர்ந்து அதனை வனத்துறை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கரும்பு காட்டுக்குள் சிம்பு கழுத்தில் பாம்புடன் நிற்கிறார் . அதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.அதில் சிம்பு மரத்திலிருந்து உயிருடன் இருக்கும் பாம்பை பிடித்து பைக்குள் போடும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சிம்பு வனவிலங்கை துன்புறுத்தி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக அவரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வேளச்சேரி வனத்துறை அலுவலகத்தில் விலங்கு நல ஆர்வலர்கள் புகார் செய்திருந்தார்.அதன் பின்னர் ஈஸ்வரன் படத்தில் காட்டப்பட்டது நிஜ பாம்பு இல்லை என்றும்,அது கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக காட்டப்பட்டது என்றும் இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்திருந்தார் .

இந்த நிலையில் சமீபத்தில் விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியின்றி படத்தில் பாம்பு காட்சிகளை பயன்படுத்தியது குறித்து இன்னும் 7 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.அதனுடன் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை ஷேர் செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டு படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது

இந்த நிலையில் ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன் வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் படத்தில் பயன்படுத்தியது ரப்பர் பாம்பு ,அதனை கிராபிக்ஸ் முறையில் படமாக்கியதாகவும் ,உண்மையான பாம்பு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசீந்திரனின் விளக்கம் வனத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் , கிராபிக்ஸ் முறையில் உண்மை பாம்பாகவே காட்சியை வடிவமைத்த படக்குழுவினரை வனத்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recent Posts

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

46 mins ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

1 hour ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

1 hour ago

வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…

1 hour ago

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

2 hours ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

2 hours ago