இன்று முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை….!!

தமிழகம் முழுவதும் இன்று  (ஜனவரி 1-ம் தேதி )முதல் வாகன வரி செலுத்துதல், பெயர் மாற்றம் செய்தல், வாகனம் புதுபித்தல் போன்ற வாகனம் தொடர்பான அனைத்து பணிகளும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மனுதாரர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணிகளுக்கான கட்டணத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

இந்த சேவையை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள், அரசு பேருந்து ஓட்டுனர்கள், மினி பேருந்து உரிமையாளர்கள், உள்ளிட்டோருக்கு கணினி மூலம் விண்ணப்பம் செய்து பணம் கட்டுதல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆன் லைன் சேவையை சுலபமாக பெறுவது குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. பேருந்து, மினி பேருந்து, கனரக லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Comment