தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண நிதிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதுபற்றி எந்த குழப்பமும் வேண்டாம் என கூறினார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்தொரு முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.