அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது-முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஆம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது.ஆனால் நாங்கள் உழைத்து தான் மேலே வந்திருக்கிறோம்.

திமுக ஒரு குடும்ப கட்சி, அதிமுகவில் அனைவரும் ஒரே குடும்பம் .100 நாள் வேலைத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து பின்னர், படித்து முடித்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும்  என்று தெரிவித்தார்.