டி-20யில் இடம் கிடைக்காதது கவலை இல்லை…!சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது- குல்தீப்..!

டி-20யில் இடம் கிடைக்காதது கவலை இல்லை…!சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது- குல்தீப்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒருநாள் , மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த இவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி 20  போட்டியில் சேர்க்கப்படவில்லை பேட்டிங் செய்யக்கூடிய சுழல் பந்து வீச்சாளர் தேவை என்பதால் குல்தீப் யாதவ் ,சாஹல் இருவரும் சேர்க்காமல் குணால் பாண்டிய , வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய குல்தீப் யாதவ் , கூறுகையில் குறுகிய போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன்.கடந்த இரண்டு டி 20  போட்டியில் அணியில் இல்லாதது பற்றி எனக்கு கவலை இல்லை. தேர்வு செய்பவர்கள் எனக்கு ஓய்வு தேவை என கருதி சேர்க்கமால் இருந்திருக்கலாம் அல்லது அணியில் மற்றம் வேண்டும் என்பதற்காக கூட என்னை அணியில் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம் என கூறினார்.

மேலும் நான் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று உள்ளேன்.இதில் சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது.திடீரென குறுகிய போட்டிகளில் இருந்து டெஸ்ட் போட்டியில் சாதிப்பது கொஞ்சம் கடினம் அதற்கு சிறிது காலம் தேவை என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube