சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை – மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை – மாநில அரசு

சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத் மாநிலத்தில் நுழைவதற்கு இனி இ-பாஸ் தேவையில்லை என்று கடந்த 16 ஆம் தேதி மாநில அரசு முடிவு செய்தது. இதனையடுத்த,  இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை இ-பாஸ் இல்லாமல் மாநிலங்களுக்குச் செல்ல அனுமதித்துள்ளது. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிம்லா, மணாலி  உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்லலாம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் இ-பாஸ் இல்லாமல் கூட இமாச்சலப் பிரதேச அரசு இடைநிலை போக்குவரத்தை அனுமதித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் இன்று மீண்டும் வர தொடங்கினர். குறிப்பாக இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவிற்கு இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளித்ததால் சுற்றுலாப் பயணிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube