திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார்.
கோவை மாவட்டமே இங்கு குவிந்துள்ளதை பாருங்கள் ஸ்டாலின் அவர்களே என்று கூறி, வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி அதிமுக என கூறியுள்ளார். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், நிச்சயமாக வெல்ல முடியாது. அதிமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இந்தியா வல்லரசு நாடாக மாற்ற உழைத்து கொண்டியிருக்கிறார் என கூட்டணி கட்சிகளை பற்றி எடுத்துரைத்தார். ஆகையால், வலிமையான கூட்டணி அமைத்து, இந்த தேசம் வலிமை பெற வேண்டும், தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட வெற்றி கூட்டணி என குறிப்பிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தற்போது கோவையில் குவிந்துள்ள மக்களை பார்த்தால், சென்ற முறை ஒரு தொகுதியை இழந்தோம், இந்த முறை 100% வெற்றி பெறுவோம் என்பதை வந்துள்ள மக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…