இனி பான் மசாலா தடை- முதல்வர் ஆதித்யநாத் அதிரடி

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் நேற்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு கூறினார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உத்தரப்பிரதேச அரசு பான் மசாலா தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.