இந்தியா-சீனா மோதலில் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை.!

இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதல்களில் இந்திய ராணுவம் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்களித்துள்ளது.

இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று முன் தினம் வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அன்று நடந்த மோதலில் இரவு என்பதால் சில ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியானதை அடுத்து தற்போது இராணுவ தரப்பிலிருந்து சீனா உடனான மோதலுக்கு பின் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவம் விளக்களித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.