ஹெல்மட் மற்றும் லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது – நாகையில் புதிய சட்டம்!

தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியம் என்று எவ்வளவு தான் சொன்னாலும் யாரும் அதை கண்டுகொள்வதே இல்லை. இதற்கான நடவடிக்கைகளாக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் ஒன்றும் நடைமுறை நிலையில் சரிப்படவில்லை.

இதனை தொடர்ந்து தற்பொழுது நாகை மாவட்டத்தில் தலைக்கவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டு செல்பவர்களுக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளவர்கள் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் அவர்களுக்கான பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal