கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா இல்லை!

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு பல உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், உயிழப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதுண்டு.

இந்நிலையில், கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் ‘கொரோனா’ தொற்று பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.