மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை துணை தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து அவை கூடிய நிலையில், வேளாண் மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநிலங்களவையில் விவசாயிகள், வேளாண் விளைபொருட்கள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதன்பின் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேளாண் மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, எதிர் கட்சிகள் சார்பில் மாநிலங்களவை துணை தலைவருக்கு ஹரிவன்ஷ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் கடிதம் அழித்துள்ளதைத் தொடர்ந்து மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு நாளை இதுகுறித்து பரிசீலிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube