தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை – அதிமுக செய்தித்தொடர்பாளர்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.

மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன்  கூறுகையில்,தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. கூட்டணி ஆட்சி மையும் வாய்ப்பை தமிழக மக்கள் இதுவரை உருவாக்கித்தரவில்லை .அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.