என்எல்சி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 14 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது தொழிலார்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், புதிய ஊதியம் மற்றும் படிகள் வழங்க குழு ஓன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலையை பொறுத்து மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுடன் உணவு, வீட்டு வாடகை சலுகை படியும் வழங்கப்படும். ஊதிய உயர்வு பலன் நடப்பாண்டு ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் எனவும், புதிய ஊதிய உயர்வு உடன்பாட்டை வரும் டிசம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உயர்வால் பல்வேறு தொழிலகங்களில் வேலை செய்து வரும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…