என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் – தமிழக அரசின் ஆலோசனை தொடங்கியது!

சென்னை தலைமைச் செயலகத்தில் என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை.

என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்,  அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக, என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்