கோவில் கட்டும் ரசிகர்களுக்கு… நிதி அகர்வால் கோரிக்கை..!

கோவில் கட்டும் ரசிகர்களுக்கு… நிதி அகர்வால் கோரிக்கை..!

நடிகை நிதி அகர்வாலிற்கு கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அறிக்கை வெளியிட்டு நிதி அகர்வால் தெரிவித்துள்ளார். 

 தமிழ் சினிமாவில் நடிகை நிதி அகர்வால் கடந்த பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் நடிகை நிதி அகர்வாலிற்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைந்திருப்பதால் அதற்காக பாலபிஷேகம் செய்யப்பட்டு ள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்த செய்தியை அறிந்த நிதி அகர்வால் இது குறித்து கூறுகையில் “நான் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் இது போன்ற நிகழ்வுகளால் நான் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தனக்கு கோவிலில் கட்ட திட்டமிட்ட ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்தது தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், என்மீது எனது ரசிகர்கள் பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகம் அடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டக்கூடிய விஷயம். அதே சமயம் எனக்காக கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும் உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube