நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து..! பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்..!

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து சென்றதாக கூறி பேராசிரியர் நிர்மலா தேவி மீது கூட்டு சதி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் முருகன் , கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முருகன் , கருப்பசாமி, ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இது குறித்து நிர்மலாதேவி வழக்கறிஞர் கூறுகையில் , அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதை ஏற்காத  நீதிபதி பரிமளாதேவி ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்டு பிறப்பித்தார்.  வழக்கை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

author avatar
murugan