நீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி..! வழக்கு ஒத்தி வைப்பு..!

நீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி..! வழக்கு ஒத்தி வைப்பு..!

ஜாமினில் வெளிவந்துள்ள நிர்மலா தேவி ,  உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோர்  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்கள் மீது கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மூவரும் மறுத்தனர்.
இந்நிலையில் நிர்மலாதேவி மாணவிகளை தனது குழந்தையை போல பாவித்து வருவதாக  நீதிபதியிடம் கூறினார். விசாரணையின்போது நீதிபதி முன் நிர்மலாதேவி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து வருகின்ற 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube