பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் தலையை துண்டித்து கொலை செய்த மர்மநபர்கள்…!

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை. 

கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் 5 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் மர்ம நபர்களால் இன்று காலை 10 மணிக்கு  தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், நிர்மலா தேவி, திண்டுக்கல் இபி காலனி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நிர்மலா தேவியின் தலையை துண்டித்த மர்ம நபர்கள், நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாடிக்கொம்பு போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.