#Breaking : 20 ஆம் தேதி தூக்கு-நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு

#Breaking : 20 ஆம் தேதி தூக்கு-நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில்   3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளில் அக்‌ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் முறையீடு செய்துள்ளனர். தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Join our channel google news Youtube