“நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு” – பிரிட்டன் நீதிமன்றம்

நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக இருந்தாா். அவர் இருக்குமிடத்தை அறிந்த அந்நாட்டு, காவல்துறையினா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை, நேற்று மீண்டும் வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பா் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீரவ் மோடியின் காவலும் நவம்பா் 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாகஉத்தரவிட்டுள்ளார்.