நீலகிரியில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேரும் வீடு திரும்பினர் -மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேரும் வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.கடந்த `10 நாட்களாக தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் நீலகிரியில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில் ,இங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.அடுத்த வாரத்திற்குள் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலத்திற்குள் வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.