என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிவசங்கரனிடம் 2-வது நாளாக தொடர் விசாரணை.!

கடந்த மாதம், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுடன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.  இதனால், பல ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ )அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று சிவசங்கரனிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிவசங்கரனிடம் 2-வது நாளாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan