அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் கொரோனாவால் தள்ளி போகாது – இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

கொரோனா வைரஸால் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய சட்ட மன்ற தேர்தல் தள்ளி போகாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸால் மாணவர்களின் பாடங்கள், அரசியல் சூழ்நிலைகள், வேலைகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே நலிவடைந்த நிலையில், அடுத்து நடக்கும் நிலை அறியாமல் இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு ஊரடங்கால் திரும்ப இயலாமல் தவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அண்மையில் நாடு திரும்பினார். 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், கொரோனாவால் அடுத்த ஆண்டுக்கான தேர்தல்கள் தடைபடாது என கூறியுள்ளார். தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், இந்த சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை வருகின்ற டிசம்பருக்குள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

author avatar
Rebekal