அடுத்தடுத்து திமுகவுக்கு வைக்கும் செக்…செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு.!

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுகம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், செந்தாமரை வீடு மற்றும் மருமகன் சபரீசன் வீட்டிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் சுமார் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபேற்று வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்