பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.! இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.!

Published by
மணிகண்டன்

வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், இபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமியை  அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Annamalai-eps

அதே போல, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வவத்தையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்புகள் தொடர்பாக இன்று இபிஎஸ் தரப்பு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அது னைவருக்கும் தெரியும். பாஜகவினர் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த நட்பு கட்சிகளின் ஆட்சிகள் எப்படி கவிழ்ந்தது. பிறகு பாஜகவினர் எப்படி ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என குறிப்பிட்டார்.

அடுத்து பாஜக கூட்டணியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, கடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜக எங்கள் கூட்டணியில் இல்லை. தனித்தே போட்டியிட்டனர். திமுகவை தவிர எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் நாங்கள் வரவேற்க்க தயாராக இருக்கிறோம். எனவும் முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

3 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

4 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

9 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

20 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago