கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் காலியாக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, அப்போது, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது என்று கூறி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலத்தை சேர்த்தவர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். நாகையில் விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், சிறு குறு தொழில் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது என்றும் பல்வேறு கருத்துகள், கோரிக்கைகளை அவர்கள் தெரிவித்தனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும், விழுப்புரம், கடலூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளிப்பூங்கா நாகை மாவட்டத்தில் தொடங்கப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றுகுறிப்பிட்டுளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…