மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா.? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை ஆதீனத்திற்கு சொத்தான இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன.
அந்த சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சுமார் 1000 ஏக்கர் நிலமானது புதுச்சேரி தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அமர்வு, ‘ மதுரை ஆதீன மடம், ஆன்மீக மடமாக செயல்படுகிறதா? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.
மேலும், மதுரை ஆதீனம் , இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்படி இருக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த சட்டவிரோதமாக ஒத்திகைக்கு விடப்பட்ட நிலங்கள் குறித்த முறைகேடுகளை விசாரிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையினை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் அக்டோபர் 28ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…