வணிகவரித்துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

வணிகவரித்துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கு  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 06.09.2021 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற வணிகவரிக்கான கோரிக்கைகள் தொடர்பான விவாத்தின்போது, “வணிகவரித் துறையில் செயல்படும் சுற்றும் படைகளின் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்கும் fasTag உடன் இணைந்த மின்னணு வழிப் பட்டி மூலம் சந்தேகப்படக்கூடிய வாகனங்களைக் கண்டறிந்து, சுற்றும் படைகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காகவும் ‘மாநில கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு அறையில் அலுவலர்கள் 24×7 சுழற்சி முறையில் பணியாற்றுவர். இக்கட்டுப்பாட்டு அறைக்கு உரிய உபகரணங்களோடு கூடிய கட்டமைப்பு வசதிகள் ரூ.3.86 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.”,என்று வணிக வரிகள் மற்றும் பதிவுசெய்தல்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,வணிகவரித்துறையில் மாநில மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு அறை 24/7 செயல்படும் மற்றும் உதவி கமிஷனர் கேடர் அதிகாரி தலைமையில் செயல்படும் மற்றும் வணிக வரி அதிகாரி மற்றும் துணை வணிக வரி அதிகாரி ஆகியோருக்கு உதவியாக இருக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

5 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

6 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

11 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

22 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago