மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!!
மதுரையில் சுப்புலட்சுமி அறிவியல் கல்லூரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மைய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் சுப்புலக்ஷ்மி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு என்ன என்பதை விளக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் அர்ச்சுனன், செயல் உதவியாளர் கிருஸ்ணமூர்த்தி முன்னிலையில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.