மக்கள் நீதி மையம் கட்சியின் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியாக கமல்ஹாசன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஏன் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் நீதி மையம் கட்சி இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மக்கள் நீதி மையத்தில் அடுத்தக்கட்ட பயணம், எப்படி கட்சியை வலுப்படுத்துவது? புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு ஆகியவை குறித்து கமல்ஹாசன் பேச இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் இணைய வழியின் வாயிலாக பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் குறித்து கமலஹாசன் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…