ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான வழக்கு * உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்வி?
ஜல்லிகட்டுக்கு எதிராக விலங்குகள் நலவாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் இன்று அதன் இறுதிகட்ட விசாரணை நீதிபதி முன்பு தொடர்ந்தது. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் சார்பில் முகுல் ரோகத்தி, ராஜேஷ் திவேதி, சேகர் நப்தே ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகினர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் நடைபெறும் விசாரணையில் தமிழக அரசு சார்பில் முகுல் ரோகத்கி, ராஜேஷ் திவேதி, சேகர் நாப்தே ஆஜர்.
இந்தியாவிலேயே ஆணவக்கொலைக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை- அரசு வழக்கறிஞர் சங்கர நாரயணன்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ, வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை ஜார்க்கண்ட்டில் அரசு நிலத்தை, தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு என எழுந்த புகாரில் விசாரணை
ஸ்டீராய்டு மருந்துகள் அதிகளவில் தந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் தந்த அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டி
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு.முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு – விரைவில் விசாரணை.
ஆர்.கே.நகர் தொகுதியில் அனுமதியின்றி நுழைந்த 74 வெளிமாவட்ட வாகனங்கள் இதுவரை பறிமுதல்.ஆர்.கே.நகரில் வெளி மாவட்ட வாகனங்கள் வர தடை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.
ராமேஸ்வரம் மீனவர்கள் ஓகி புயலின் தாக்கத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகுகளுடன் 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இலங்கை போலீசார், மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்துள்ளனர். கைது செய்து அவர்களை விசாரித்து வருவதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடைசி மீனவர் கரைசேரும் வரை தேடுதல் பணி தொடரும் – அமைச்சர் ஜெயக்குமார். ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் 4 பேர், சிகிச்சை பெறுபவர்கள் 6 பேர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவர்கள் 19 பேர் – அமைச்சர் ஜெயக்குமார்
ஆர்.கே.நகரில் வாக்குகளை பெறுவதற்காக பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சுயமாக சிந்திக்கும் தன்மையை இழக்கும் வகையில் விதிமீறல்கள் நடக்கின்றன,மாலை 5 மணிக்கு மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக பிஜேபியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பணம் விநியோகிப்பதாக என்னுடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்; காவல்துறையின் செயலுக்கு அஞ்ச மாட்டோம்.அனுமதித்த நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்யப்படுகிறது; விதிமீறல்கள் எதுவும் நடக்கவில்லை.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன் – டி.டி.வி.தினகரன்
தேர்தல் நடந்தால் நியாயமாக நடைபெற வேண்டும், இல்லையேல் தேர்தல் நடத்துவது வீண். தேர்தல் விதிமீறல் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின் தமிழிசை பேட்டி.
கட் அவுட், பேனர் வைக்க அனுமதிக்கும் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது- உயர்நீதிமன்றம் வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட் அவுட்கள் வைக்க அனுமதிப்பதா?- நீதிபதி கேள்வி.
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பாக செயல்படுகிறார்.மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுவது தவறு – பாஜக எம்.பி., இல.கணேசன்
திருமாவளவன் கூறியதில் எந்தவித மத விரோதக் கருத்துக்களும் இல்லை, இதை வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகின்றனர் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கான, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் காலை 11 மணிக்கு, ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது – தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் “பிரஷர் குக்கர் காய்லாங்கடைக்கு போகும்” என மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.