ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் […]
கோயிலை இடிப்போம் என்பது அப்பட்டமான இந்து விரோத செயல்; திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும்” -ஹெச். ராஜா
2017 அக். வரை டெங்கு காய்ச்சலால் 16,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 52 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை.அக். மாதத்திற்கு பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.4-க்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிய வழக்கில் சுகாதாரத்துறை பதில் மனு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தாண்டு தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது – பதில் மனுவில் சுகாதாரத்துறை தகவல்.
ஆர்.கே.நகரில் இதுவரை ரூ.5,31,500 ரொக்கம் மற்றும் 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
பெரியபாண்டியனின் துப்பாக்கியைப் பறித்து அவரையே சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள். ராம்புராவில் கொள்ளையன் நாதுராமை கைது செய்து வேனில் ஏற்றியபோது நடந்த பயங்கரம். பெரியபாண்டியனை கொள்ளையன் நாதுராமே சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல்.
பாலியல் – கொலை குற்றவாளி தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் செருப்பு வீசி தாக்குதல்! ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் பிரசன்னா விலகினார்
ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓகி புயலால் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி வருவதாக தெரிவித்தார். மேலும் எத்தனை முறை ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறாது என்றும், அந்த காலம் வரப்போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார். இந்நிலையில், ஓகி புயலால் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கமிசனில் 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஜெ.தீபா தற்போது வரை ஆஜராகவில்லை நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.தீபாவை விசாரிக்க இன்னும் காத்துகொண்டிருக்கிறார்….??
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 1,947 போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள் தப்பிக்க முடியாது குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆய்வாளர் பெரியபாண்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று ஒப்படைக்கப்பட வாய்ப்பு – இணை ஆணையர் சந்தோஷ்குமார்.
அடுத்த ஆண்டு(2018) தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
ஆர்.கே.நகர் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக, தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்.ஏற்கனவே தினகரனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா தான் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள்,விவசாயிகள்,மலைவாழ் மக்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் ,சிறு குறு தொழிலாளர்கள், வீடு இழந்தோர், புயலினால் உயிரிழந்தோர் ஆகிய அனைத்துக்கும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பற்படை மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 7.15க்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்.அதேபோன்று நெல்லையிலிருந்து நாளை காலை 7.20க்கு புறப்பட வேண்டிய தாதர் வாராந்திர விரைவு ரயில் 8.50க்கு புறப்படும். கோவை – சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் நாளை மாலை 3.25க்கு பதில் மாலை 5.25க்கு புறப்படும் .மேலும் கோவை விரைவு ரயில் நாளை பிற்பகல் 2.55க்கு பதில் மாலை 5.10க்கு சென்னைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது
ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக – டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் நடைபெற்றுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் தங்களுக்குள் மாறிமாறி கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனையடுத்து இருதரப்பினரில் பலரும் காயமடைந்துள்ளனர்.பலருக்கும் மண்டை உடைந்து உள்ளது.
ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்
இந்த வருடம் ஜல்லிகட்டு நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் மாபெரும் போராட்டதுக்குபிறகு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வருடம் ஜல்லிகட்டு வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதனை எதிர்த்து, பீட்டா அமைப்பும், விலங்குகள் நலவாரிய அமைப்பும் உச்சீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிதித்துள்ளது. தமிழக அரசு விதித்த ஜல்லிகட்டு அனுமதி சட்டத்தை தடை செய்ய பீட்டா அமைப்ப்புக்கும், விலங்குகள் அமைப்புக்கும் […]