ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி வரை நிலவரப்படி 57.16% வாக்குகள் பதிவாகிவுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு; ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை அம்ருதாவின் முறையீட்டை ஏற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். source: dinasuvadu.com
ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கு . தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.. source: dinasuvadu.com
ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி வரை நிலவரப்படி 24.01% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் தங்கி தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் இன்று தீரர்ப்பு வெளியானது. இதில் குற்றவாளிகள் என குறிப்பிடபட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் நிரபராதி என கூறி இன்று தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானபடுத்தி அழிக்க போடப்பட்ட வழக்கு தான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று கூறினார். […]
மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்த பெட்டியில், நேற்று தெர்த்சல் விதிமுறைகளை மீறியதாக சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும், இன்று காலையில் பணபட்டுவாடா நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆர்கே நகர் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக பணம் கொடுக்க வாக்காளர்களுக்கு 20 ருபாய் டோக்கேன் கொடுத்து பணபட்டுவாடா செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். அதனையடுத்து அந்த விடியோவை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒளிபரப்ப கூடாது என்று கூறியதால், அந்த வீடியோவின் ஒளிபரப்பு சமூக வலைத்தளங்களில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், தேர்தல் நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன் தேர்தலை மையப்படுத்தி எவ்வித பரப்புரையும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். வீடியோ ஒளிபரப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு126(1)(பி)ஐ மீறுவதாகும். […]
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு இன்று (டிச.21) வெளியாகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது. இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. […]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார் திமுக வேட்பாளர் மருதுகணேஷ். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை எனவும்,அதேபோல் ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தாலுமே ஆர்.கே.நகர் மக்கள் ஏமாறமாட்டார்கள் எனவும் வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். source : dinasuvadu.com
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குப்பதிவிற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது செய்யபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
இன்று சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது – சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.95 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.99 காசுகள் உள்ளன.நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.88 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 6 காசுகளும்,டீசல் 11 காசுகளும் உயர்ந்துள்ளன.
சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது.ஆர்.கே.நகர் தொகுதியில் காலை 8 மணி முதல் வாக்குப் பதிவுஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு. வாக்குப்பதிவு 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் காலையில் 6 மணிக்கே வாக்குச்சாவடிகளில் குவிந்திருக்கும் வாக்காளர்கள் ஆர்வமா?
திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு மற்றும் பரப்பலாறு அணைகளிலிருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனம், பச்சையாறு குளங்கள் பாசன நிலுவைப் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பெருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால் 9,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பதன் மூலம் 1223.17 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக இதுபோன்ற வீடியோவை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது கே.பி.முனுசாமி source: dinasuvadu.com
வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டையின் அருகே சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் விரைவு ரயிலில் 750 மூட்டை அரிசி கடத்தல் செய்யப்பட்டது. இதனை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை பரிமுதல் செய்து, அந்த 750 மூட்டை அரிசி நுகர்பொருள் வாணிய கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது சிகிச்சை பெற்ற வீடியோ இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளாரான வெற்றிவேல், மேலும் கூறுகையில், ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது அவரை எங்கு அட்மிட் செய்யலாம் என அமைச்சர்கள் விவாதித்த வீடியோகள் நிறைய உள்ளன. அதனையும் வெளியிடுவோம்.’ என தெரிவித்தார். மேலும், ‘ஆர்கே நகர் தேர்தலுக்காக இதனை […]
எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேரடி முறையில் பெறப்பட்டால் அவை செல்லும் என அரசு தெரிவித்துள்ளது. யூ.ஜி.சி. அங்கீகரித்த பல்கலைகழகத்தில் முதலில் பட்டம் பெற்ற பிறகு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் முழு அல்லது பகுதி நேர படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும். இவ்வாறு பெற்ற பட்டம், தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலை கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்த பட்டம் […]
ஆட்டுக்கு தாடி போல, தேவையில்லாதவர்கள் ஆளுநர்கள் என்றார் அண்ணா. ஆளுநர் தேவையில்லை என்பது திராவிடக் கட்சிகளின் கோரிக்கையாக இருந்தாலும் இரு திராவிடக் கட்சிகளுமே தங்களுக்கு தேவையானபோது ஆளுநரைப் பயன்படுத்திக்கொள்ள தவறியதில்லை. ஆட்சிக் கலைப்பு என்ற அஸ்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கைவந்த கலை. தனக்கு மாநில அரசு இணக்கமாகவும், அடக்கமாகவும் இல்லையென்றால் அவர்கள் எடுக்கும் அஸ்திரம் ஆளுநர் ஆட்சி என்பதே. 25-06-1975 அன்று பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். திமுக இதை கடுமையாக எதிர்த்தது. விளைவு […]
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 6 நாளில் 4.89 அடி குறைந்து 74.34 அடியாக உள்ளது அணையின் நீர்வரத்து 382 கனடியில் இருந்து 235 கனஅடியாக குறைந்தது நீர் இருப்பு: 36.547 டிஎம்சி நீர் வெளியேற்றம்: 10,000 கன அடி தற்போது மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. source: dinasuvadu.com