அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தொகுதி பங்கீடு குறித்து தேதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக, தேமுதிக உடன் இழுபறி உள்ள நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 3 மணி நேரம் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தினர். நேற்று முன்தினம் பாமக உடன் தொகுதிகளிலும் முடிந்த நிலையில் இன்று பாஜக மற்றும் தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்கு வங்கிகள் கொண்ட பாமகவிற்கே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், குறைந்த வாக்கு வங்கிகள் கொண்ட பாஜகவிற்கு பாமகவை விட குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…