அமைச்சர் செல்லூர் ராஜூக்கு முதலமைச்சர் மதுசூதனனா!
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை முதலமைச்சர் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இரண்டாவது முறையாக குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக தொண்டர்களுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர்ராஜூ, தொகுதி வளர்ச்சிக்காக முதலமைச்சர் என்று கூறிவிட்டு உடனடியாக திருத்தம் செய்து பின்னர் அமைச்சர் மதுசூதனன் எனக் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 4ஆம் தேதியன்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுசூதனனை முதலமைச்சர் எனக் குறிப்பிட்டு பின்னர் திருத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.