Tamilnadu Minister Duraimurugan - Cauvery River [File Image]
தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டு, ஆணையம் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம். தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்திற்கு 5,000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் ன்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்றம் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கை தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, ஆணைய உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடகா உள்ளது. சட்ட ரீதியாக சென்று கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை சரியாக இருக்காது. காவிரி நீர் திறப்பால் குறுவை சாகுபடியை காப்பாற்ற உதவும். ஒட்டுமொத்த நீரை திறக்க கோரவில்லை, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை தான் திறந்துவிட கோருகிறோம் எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…