ஜே.இ.இ தேர்வுக்கு தமிழக மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதில் இருந்து விலக்கு.
ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை விளக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி ஆண்டு, கல்வி வாரியத்தை குறிப்பிட வேண்டிய பிரிவு நீக்கப்பட்டது. 2021-ல் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வது அவசியம் என இருந்த நிலையில், தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…