#BREAKING: அட்சய திரிதியை முடிந்ததும்… தங்கம் விலை மீண்டும் உயர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை.

அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உயரத்தொடங்கியது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.38,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.68.30க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்து நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருப்பது நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அட்சய திரிதியை நாளில் ஒரு சவரன் தங்க நகை ரூ.38,528க்கு, ஒரு கிராம் தங்கம் ரூ.4,816கும் விற்பனையானது. அதேநேரம் அன்றைய தினம் மாலையில் ஒரு சவரன் தங்க நகை ரூ.38,368க்கு விற்பனையானது. மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்ததால் நள்ளிரவு வரையில் வியாபாரம் நடந்ததாக கூறப்படுகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் அட்சய திரிதியை நாளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்பனையானதாக தகவல் வெளியாகியிருந்தது. கடந்த 3 ஆண்டுகளை ஒப்பிடும்போது இது அதிகம் என்கின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

35 seconds ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

9 minutes ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

18 minutes ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

3 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

3 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

4 hours ago