பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அந்த வீடியோவில் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசியிருக்கிறார்.
எச்.ராஜாவின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், அக்கட்சியின் மாநில தலைவர் இரா.முத்தரசன் எச்.ராஜாவின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது எனவும், காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தை தரம் தாழ்ந்து பேசியுள்ள எச்.ராஜாவை தமிழக காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் இன்று ராமசாமி படையாச்சியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு பேட்டியளித்தபோது நீதிமன்றம் குறித்து பேசிய எச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
DINASUVADU
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…