ஸ்டெர்லைட் ஆலை இயங்க கூடாது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..!

Published by
Dinasuvadu desk

 

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று பார்வையிட்டார்.

பின்னர் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை இயங்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காகவே மின் இணைப்பை துண்டித்து, தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளது. தொடர்ந்து நிரந்தரமாக மூட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. போராட்டத்தை கட்டுப்படுத்த முதலில் வானத்தை நோக்கி சுடப்பட்டது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை ஏற்பட்டது.

துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதுபற்றிய விபரங்களை இப்போது கூற இயலாது. அதன் அறிக்கை வந்த பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும்.

94 நாட்களாக பொதுமக்களின் போராட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இன்று இரவுக்கு மேல் இணையதள சேவை முடங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Recent Posts

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

31 mins ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

32 mins ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

42 mins ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

45 mins ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

49 mins ago

ஆர்த்தியுடன் விவாகரத்து முடிவு! மும்பையில் செட்டில் ஆகிறாரா ஜெயம் ரவி?

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…

1 hour ago