பால் கலப்படம்..உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
பாலில் செய்யும் கலப்படம் தொடர்பாக சூரியபிரகாஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது பாலில் கலப்படம் செய்வது ஏற்க முடியாதது.கடந்த ஒரு ஆண்டாக இந்த தொடர்பான விசாரணையில் என்ன ஆய்வு செய்யப்பட்டுள்ளது , எந்த வகையில் ஆய்வு நடைபெறுகின்றது என்று பொது சுகாதார இயக்குனர் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.அதுமட்டுமில்லாமல் பாலில் கலப்படம் செய்ததை ஆய்வு செய்த விவரம் , பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்ற விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
dinasuvadu.com