கருணாநிதி இறுதி அஞ்சலி…!உயர்ந்த உயிர் பலி …!கூட்ட நெரிசலில் 4 பேர் பலி …!50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Published by
Venu

நேற்று மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட  கூட்ட நெரிசல்  காரணமாக தொண்டர்கள் 4 பேர்  இறந்துள்ளனர்.
Image result for karunanidhi funeral

நேற்று முன்தினம்  11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
நேற்று முன்தினம்  இரவு கோபாலபுரம் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் பின்னர் நேற்று அதிகாலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இங்கும் நேற்று  காலை முதலே அனைத்து தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் நேற்று  மதியம் ராஜாஜி அரங்கத்தில் உணர்ச்சி பெருக்கில் கருணாநிதி உடலை பார்க்க முண்டியடிக்கும் தொண்டர்களை கட்டுப்படுத்த போலீஸ் திணறினார்கள்.

இதனால் ராஜாஜி ஹாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் இறந்தார்கள்.மேலும் 50க்கும் மேற்பட்டோர் பேர் காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி அழிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த
மோகன் என்பவர் இன்று உயிரிழந்தார்.சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

 டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…

13 mins ago

“மன உறுதியுடன் வெளியே வந்துள்ளார்”! செந்தில் பாலாஜியை சந்தித்த பின் கே.என்.நேரு பேட்டி!

சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…

25 mins ago

‘எப்படி இருக்க?’ .. செந்தில் பாலாஜியை கண்கலங்கி நலம் விசாரித்த எம்.பி ஜோதிமணி!

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…

46 mins ago

செப் – 30 திங்கட்கிழமை இங்கெல்லாம் மின்தடை! நோட் பண்ணிக்கோங்க மக்களே..

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

1 hour ago

உறவுகளை நினைவூட்டும் “மெய்யழகன்” ட்விட்டர் விமர்சனம்.! குடும்பங்களை கவர்ந்தாரா கார்த்தி?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…

1 hour ago

INDvsBAN : மழையால் முடிந்த முதல் செஷன்! வலுவான நிலையில் வங்கதேச அணி?

கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…

1 hour ago