கருணாநிதி இறுதி அஞ்சலி…!உயர்ந்த உயிர் பலி …!கூட்ட நெரிசலில் 4 பேர் பலி …!50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நேற்று மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக தொண்டர்கள் 4 பேர் இறந்துள்ளனர்.
நேற்று முன்தினம் 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
நேற்று முன்தினம் இரவு கோபாலபுரம் வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அங்கு பல்வேறு முக்கிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன் பின்னர் நேற்று அதிகாலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இங்கும் நேற்று காலை முதலே அனைத்து தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் நேற்று மதியம் ராஜாஜி அரங்கத்தில் உணர்ச்சி பெருக்கில் கருணாநிதி உடலை பார்க்க முண்டியடிக்கும் தொண்டர்களை கட்டுப்படுத்த போலீஸ் திணறினார்கள்.
இதனால் ராஜாஜி ஹாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் இறந்தார்கள்.மேலும் 50க்கும் மேற்பட்டோர் பேர் காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி அழிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த
மோகன் என்பவர் இன்று உயிரிழந்தார்.சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.