டெல்லி திக்ரி கலான் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரி கலான் பகுதியில் உள்ள பிவிசி சந்தையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் சனிக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க குறைந்தது 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளன.
பல மணி நேரமாக பரவிய தீ அணைப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வரும் நிலையில். இன்னும் தீயை கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும், முதற்கட்ட தகவல்களின்படி, இதுவரை இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதைப்போல கடந்த 2021 -ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள திக்ரி கலான் பிவிசி சந்தையில் இதேபோன்ற ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டதால் தீயணைப்பு துறையினர் 40 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…