பீகாரில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.
பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், வலியில் துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் கூறுகையில், சிகிச்சையின்போது வலி தாங்க முடியாமல் சிலர் அலறித் துடித்ததாகவும் அப்போது 4 பேர் சேர்ந்து அவர்கள் கை மற்றும் கால்களை பிடித்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சகரியா மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவ அதிகாரி அமர்கண்ட ஜா, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…