வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி.. உச்சநீதிமன்றத்தில் விவசாய அமைப்பு மனு தாக்கல்..!

Published by
murugan

சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு விவசாய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  இந்திய கிசான் யூனியன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மூன்று புதிய சட்டங்கள் விவசாயத்தை வணிகமயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்று இந்திய கிசான் யூனியனின் தலைவர் வனுப்பிரதாப் சிங் கூறினார். மேலும், விவசாயி கார்ப்பரேட்டுகளின் தயவில் இருக்க வேண்டும். போதுமான விவாதம் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளளோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதிலிருந்து புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் நேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ரயில் பாதையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விரைவில் தேதியை அறிவிக்கப்படும் என்றும் கூறினார். போராட்டங்களை தீவிரப்படுத்துவதோடு, தேசிய தலைநகருக்கு செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போராட்டங்களை தொடங்குவதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன.

Published by
murugan

Recent Posts

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

12 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

16 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

41 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

4 hours ago