Categories: இந்தியா

அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள்… 10இல் 9 பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறதாம்.!

Published by
மணிகண்டன்

குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போது 10 இல் 9 பேருக்கு தங்கள் வேலையில் முன்னேற படிப்பதற்கு கடினமாக அமைந்துள்ளது என ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன காலகட்டத்தில் நிரந்தர பணி என்பது அரிதாகிவிட்டது. ஒரு பணியில் இருந்து கொண்டு, அந்த பணி சூழலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நகர்வுக்கு புதியதாக கற்றுக்கொள்வது இன்றியமையானதாக மாறி வருகிறது. இதனை புரிந்துகொண்டு அதற்கேற்றாற் போல புதியதாக கற்றுக்கொள்பவர்கள் முன்னேற்றமடைந்து செலகின்றனர். ஆனால் பணிக்கு செல்லும் பெரும்பாலான ஆண்களுக்கு பணிச்சுமையை காட்டிலும் குடும்ப பொறுப்புகள் என்பது அதிகரித்து காணப்படுகிறது. இதனால் புதியதாக கற்றல் கூட கடினமானதாக மாறி வருகிறது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் புதியாக கற்றல் குறித்த பிரபல தளமான லிங்க்டு இன் (LinkedIn) பணியில் வேலை செய்பவர்கள் மத்தியில் ஓர் ஆய்வை நடத்தி, அதில் இருந்து பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், 10இல் 9 பேர் தங்கள் பணி நிமித்தமாக புதியதாக கற்று கொள்வதில் சிரமம் மேற்கொள்வதாகவும், அதற்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக அமைகிறது என  LinkedIn Career மூத்த நிர்வாக அதிகாரி நிரஜிதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 28 சதவீதம் பேர் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல்களை பெறுகின்றனர். அல்லது வழங்குகின்றனர். என்றும், 27 சதவீதம் பேர் புதிய தொழில் வாய்ப்புகளை தேடுகின்றனர் என்றும், 26 சதவீதம் பேர் சக தொழிலாளர்களிடையே தங்கள் அறிவை பகிர்ந்து கொள்கின்றனர் என்றும் அறியப்பட்டுள்ளது.

மேலும், LinkedIn தரவுகளின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஒரு வேலைக்கு தேவையான திறன்கள் 64 சதவிகிதம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொழிலாளர்கள் கற்றலில் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையானதாக மாறுகிறது. என்றும் நிரஜிதா பானர்ஜி கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

21 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago