புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாணவர்கள் போல பள்ளி சீருடை அணிந்து சென்ற எம்.எல்.ஏ-க்கள்..!

Default Image

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாணவர்கள் போல சீருடை அணிந்து வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள். 

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர், இன்று காலை தொடங்கியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

puthuchery

இந்த நிகழ்வில் முதலாவதாக மறைந்த ராணி எலிசபெத்துக்கு பேரவையில் இரங்கல் தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீ்ருடை வழங்காததை கண்டித்து பள்ளி சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டும் வந்தனர்.

மேலும், சீருடை விவகாரம் மற்றும் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து பேரவையில் இருந்து அனைத்து திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்