இப்படியும் ஒரு மனிதரா? தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர்!

Published by
லீனா

தனியாளாய் நின்று குழந்தையை அடக்கம் செய்த தேநீர்கடைக்காரர்.

பெங்களூருவில் புறநகர் பகுதியான பிரேசர் டவுன் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் அப்துல் ரசாக். இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இவர், தேநீர்கடை நடத்தி வருவதுடன், தன்னார்வ பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த நபர் தனது கைகளில் இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்தியவாறு கொண்டு செல்லும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் இதயங்களை நொறுக்கியுள்ளது.

பெங்களூர் செயின்ட் ஜான் மருத்துவமனையில் இருந்து, சிறுநீரக கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பால்  உயிரிழந்த குழந்தையை எடுத்து சென்று தனியாளாய் அடக்கம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அந்த பெண் குழந்தை மேற்குவங்கத்தை சேர்ந்தது. சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.’ என்று தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்கள் மூலம் கிடைத்த தகவலையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்து சென்று உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த ரசாக்கின் தன்னலமற்ற சேவைக்கு குழந்தையின் பெற்றோர் மன நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

5 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

5 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

6 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

8 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

8 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

9 hours ago